வெள்ளி, 9 மார்ச், 2018

சித்தர் நூரோந்து சுவாமிகள்

  • நூரோந்து சுவாமிகள் - நூரோந்து மலை அஞ்செட்டி, தேன் கனி கோட்டை 
  • நூரோந்து சுவாமிகள் சுமார் 850 வருடங்கள் முன் வாழ்ந்த சித்தர்..
  • பல அதிசய அற்புதங்களை நிகழ்த்தியவர் அவர் வழி சீடர்கள் 12 பேர் ஒரே இடத்தில் சமாதியில் இருப்பது சிறப்பு இதை 12 தலை முறைகளாக பாதுகாத்து வருகின்றனர்..
  • அடர்ந்த வனம் எங்கும் பசுமையான சூழல் பல முலிகைகளை கொண்டது இந்த மலை.
  • சுவாமிகள் வரலாறு சரியாக தெரியவில்லை இவர் மகிமையை கேள்விபட்டு மைசூர் மகாராஜா ஒரு வாளை இங்கு பரிசாக கொடுத்ததாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள் ..
  • மலை மேல் பல குகைகள் உள்ளதாகவும் அதை யாரும் தவறாக பயன் படுத்தாமல் ஒரு நாகம் அதை பாதுகாப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் ..
  • கல்யாணி குளம் என்று மலை மேல் ஒரு மூலிகை குளம் உள்ளது பல வித நோய் தீர்க்கும் இந்த குளம் சுவாமிகளால் உருவாக்க பட்டதாகவும் சுமார் 850 வருடங்களாக நீர் வற்றாமல் உள்ளது அதிசயம்..
  • விஞ்ஞானத்தால் விடை தெரியாத அதிசயம் பல உள்ளன அதில் ஒன்று தான் இந்த நூரோந்து சுவாமிகள் சமாதி இடம் இங்கு தான் எண்ணெய்க்கு பதிலாக இளநீரில் விளக்கு எரியும் அதிசயம் நிகழ்கிறது..
  • விளக்கு எண்ணெய்க்கு பதிலாக இளநீர் வாங்கி செல்ல வேண்டும் அவர் சமாதி பீடத்தை தவிர வேறு எங்கும் விளக்கு எறிவதில்லை..என்பது ஒரு அதிசய நிகழ்வு..
  • இங்கு இளநீரில் விளக்கு ஏற்றுவதால் பல வித பிரச்சினைகள் தீர்வதாக இங்கு வந்து சென்றவர்கள் தெரிவிக்கிறார்கள்..
  • சுத்தமான காற்று நீர் அற்புத வனம் பறவைகள் கீதம் என்று ரம்மியமான இயற்கை நமக்கு அளித்த வரம் அதை முறையாக பயன்படுத்தி சுவாமிகளை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற பிராத்திக்கிறேன்...
  • அஞ்செட்டி சென்று உரிகம் சாலையில் தக்கட்டி எனுமிடத்தில் பிரிந்து மலை பாதையில் சென்றால் நூரோந்து சாமிமலை செல்லலாம். சிறிய குகை கோவில்
  • அடர்ந்த வனம் மிருக நடமாட்டம் அதிகம் என்பதால் தகுந்த எச்சரிக்கை உடன் செல்வது நல்லது...
  • தாங்கள் செல்லும் போது சில மர கன்றுகளை அங்கு நடவும்..
  • பிளாஷ்டிக் பொருட்களை தவிர்க்கவும் சுற்று சூழல் பாதுகாக்க உதவவும்..

சிவாயநம

ராஜா @ ஈஸ்வர்
தர்மபுரி
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக