சனி, 10 மார்ச், 2018

யோகானந்த பாரதி சாமிகள் ஜீவசமாதி - தர்மபுரி


தஞ்சையில் பிறந்த யோகானந்த பாரதி சாமிகள் தனது குருநாதர் சொக்கலிங்க தம்பிரான் அவர்கள் ஆணைப்படி பாரதம் முழுவதும் தலப்பயணம் மேற்கொண்டார்.

பல அற்புதங்களை நிகழ்த்தி பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் பிணிகளை நீக்கினார்..

இறுதியில் பாலக்கோடு கடமடை ரயில்வே கேட் அருகில் உள்ள வீரஆஞ்சனேயர் கோயில் அருகில் மூன்று ஆண்டுகள் தங்கி தவத்தில் இருந்தார்..

நித்தியானந்த ஆஸ்ரமத்தை 1994 ல் தோற்றுவித்தார்.

1995 ஆம் ஆண்டு மார்கழி சதய நட்சத்திரத்தில்
தமது 30 வது வயதில் நிர்விகல்பசமாதி நிலையை அடைந்தார்.

ஜீவசமாதி இருக்குமிடம்: தர்மபுரி – ஓசூர்சாலையில், பாலக்கோடு அருகில், இரயில்வே கேட், கடமடை, யோகானந்த நகர்.

சிவாய நம 
ராஜா @ ஈஸ்வர் தருமபுரி.

          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக