சனி, 20 டிசம்பர், 2014

ஜீவ நாடியில் வந்த பேரதிசயம்

சென்ற பதிவின் தொடர்ச்சி:-



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அதில் அந்த அம்மன் காட்சி கொடுத்த வகையில் தன்னை

வெளிப்படுத்த அந்த அம்மன் செய்த திருவிளையாடல் இன்னும் மெய்

சிலிர்க்க வைக்கிறது. புற்று உள்ள இடத்தில் இருந்து சற்று அருகே திரு.ஜீவா

என்பவருக்கு ஒரு சிறிய பெண் ஒடுவது போல் தெரிந்து இருக்கிறது. யார்

ஓடுவது என்று பின் தொடர்ந்து சென்ற ஜீவா அவர்கள் திடீரென இந்த பெண்

மறைந்து விடுவதைக் கண்டு அதிசயப் படுவதற்குள் புற்றில் இருந்து

அந்த தெய்வம் வெளிப்பட்டிருக்கிறது. இதை உடனே ஜீவா அவர்கள் திரு.ராஜீ

அவர்களிடம் சொல்ல அதிசயம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திரு.ஜீவா

மற்றும்திரு.ராஜீஆகிய இருவரும்நமது ஞானஸ்கந்தர்ஜீவ நாடியை

தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல

ரகசியங்கள் வெளிவரும்.பொறுத்திருங்கள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக