திங்கள், 22 டிசம்பர், 2014

கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்:


கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்




1.ஆறுமுகம்பனிரெண்டு கரங்களுடன் – அவினாசி, பூண்டியிலும்,
2.ஐந்து முகம் எட்டு கரங்களுடன் – பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,
3.நான்கு முகம்எட்டு கரங்களுடன் – திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்,
4.மூன்று முகம் ஆறு கரங்களுடன் – கோபி, காசிபாளையம்குமரன்கரட்டிலும், 5.இரண்டு முகம் நான்கு கரங்களுடன் – சென்னிமலையிலும்,
 6.ஒருமுகம் – தண்டாயுதபாணியாக – பழனியிலும் நின்று

அருள்செய்யும்ஸ்ரீமுருகப்பெருமானின்மேற்கண்ட ஆறு தலங்களும்கொங்கு
நாட்டின்ஆறுபடை வீடுகளாகும்.



கொங்கு மண்டலத்தில் 6 மலைகளிலும் 6 கோயில்களில்ஆறுமுகன்

அருள்புரிவதால்இதை கொங்கு மண்டல அறுபடை வீடுகள்என்பர். வைகாசி

விசாகத்தன்று காலை சென்னிமலை முருகன்; முற்பகல்சிவன்மலை

முருகன்; உச்சிவேளை கைத்தமலை வேலன்; மாலை அருள்மாலைமுருகன்;

அஸ்தமன சந்தியில்சீனாபுரமலை முருகன்; அர்த்த ஜாமத்தில்திண்டல்மலை

வேலவன் என ஒரேநாளிலேயே அனைவரையும்தரிசித்துவிடலாம். இதை

ஏகதினவழிபாடு என்பர். இதனால்நோயற்ற நீண்ட ஆயுள், நிறைந்த வாழ்வு,

பேரின்பம் பெறலாம்.



தமிழ்நாட்டில்அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல்இலங்கையிலும்

முருகனின்ஆறு கோயில்கள்விசேஷமாகக்கருதப்படுகிறது. இதை

முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர்

கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலிவேலி

என்பவையே அறுபடை வீடுகளாகப்போற்றப்பெறுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக