புதன், 28 நவம்பர், 2018

ஜீவ நாடி - வாசகரின் அனுபவம் - 5

அடியேன் ஜீவ நாடி பார்க்க ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடம் ஒரு பெண் மருத்துவரை அழைத்துச் சென்றேன். ஜீவ நாடி படிக்கப்பட்டது. மறுமணம் வேண்டாம் என்றவர்க்கு நிச்சயம் மறுமணம் செய்து கொள் என்றும் அந்த அமைப்பு உண்டென்றும் மகத்தான குழந்தை அருள் உண்டு என்றும் உரைத்து சில வழிபாட்டு முறைகள் உரைக்கப்பட்டது. அதன்படி அந்த மருத்துவரும் வழிபாட்டு முறைகளை நம்பிக்கையோடு கடைபிடித்து வந்தார். சில காலம் கழித்து நல்ல முறையில் மிகவும் அருமையான கணவரை மணந்தார். இன்று மணமாகி மகப்பேறு அடைந்து குருவிற்கு நன்றி சொன்ன வரலாறான அற்புதமும் உண்டு.

அதேபோல் எமது அத்தை பையனுக்கு முதல் நாடியிலேயே உத்தியோகத்தில் விரைவில் வெளிநாடு யோகம் உண்டு என்று எடுத்துரைத்து முருகன் கூறிய ஆலய வழிபாடு பரிகாரம் 3 மாதம்செய்து முடிந்த உடன் இப்போது சவுதிஅரேபியாவில் project க்காக company மூலமாகவே சென்று உள்ளார். முருகனது கருணையே கருணை. இப்படி எனக்கு குருவாகவும் ஜீவ நாடி மூலம் அருள் செய்து வரும் சுவாமிகளை அடியேன் ஸ்ரீஜெகதீஸ்வராய நமஹ என்றே சொல்வேன். சுவாமிகள் முருகனையே துதி என்றாலும் எனது வாழ்வில் குருவாக வந்ததால் குருவின் மந்திரத்தைச் சொல்வதைப் பெருமையாகக் கருதுகின்றேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க. நன்றி!

இராமர் கண்ணன், திருமங்கலம்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக