வியாழன், 1 நவம்பர், 2018

ஜீவ நாடியில் வந்த ஆச்சரியமூட்டும் பலன்கள் பரிகாரங்கள்


                                                  
இன்று திருப்பூரில் இருந்து ஒரு தம்பதி ஜீவ நாடி பார்க்க வந்தார்கள். வழக்கம்போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடியைப் பூஜித்து நாடி வாசிக்கத்துவங்கினார்கள். முருகப்பெருமானது அருளால் வந்தவர்கள் ஏற்கனவே நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி குறித்து கேள்விப்பட்டு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பி வந்தார்கள் போலும். மட மடவெனெ ஜீவ நாடியில் வாக்கு வந்தது. ஒரு சிலர் என்ன வருகின்றது என்று பார்ப்போம் என்று சோதிக்கும் மனம்போக்கில் நாடி கேட்க அமர்ந்தால் ஜீவ நாடியில் சித்தர்களும் முருகப்பெருமானும் ஏதும் பெரிய அளவில் வாக்கு உரைப்பதில்லை என்பது அனுபவம். அதே சமயத்தில் முழு நம்பிக்கையுடன் வருபவர்களை சித்தர்களும் முருகப்பெருமானும் ஜீவ நாடியில் நல்ல வாக்கு சொல்லாமல் கைவிடுவதில்லை. அந்த தம்பதிகளுக்கு என்ன உரைத்தார் முருகப்பெருமான்…எடுத்த எடுப்பிலேயே வயிற்றில் ஒரு உறுப்பு நசியத் தொடங்கி இருக்கின்றதே மைந்தா வைத்தியம் கொள் என்றார்…ஆம் நாடி கேட்பவருக்கு சிறுநீரகத்தில் கிரியாட்டின் அளவு கூடி உள்ளதாக வந்தவர் தெரிவித்து அதை தீர்க்கும் வழிகள் அறியவே வந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு ஜீவ நாடி ஒரு குறிப்பிட்ட வைத்தியத்தைச் சொல்லி அங்கு செல் உனக்கு விடை கிட்டும் என்றது. அடுத்து தாய் தந்தை அனுகூலம் இல்லை குறிப்பாக தந்தையின் ஆன்மா சாந்தியில் இல்லை. தந்தையின் மறைவிற்கு பின் உனக்கு தொழிலிலும் சரிவு, உடன் பிறந்த ஒரு தமக்கையும் மறைவு, உனக்கும் ஆண் வாரிசு இல்லை இரண்டு பெண்தான் என்றது ஜீவ நாடி. அடுத்து மனைவி கழுத்தில் தாலி தவிர மற்ற எல்லா நகையும் அடகிற்கே போய் இருக்கும் என்றது ஜீவ நாடி. முற்றிலும் உண்மை என்று சொல்லி வந்தவர் கண்கலங்கிக் கொண்டிருந்தார். காரணம் சொன்னது அனைத்தும் 100% உண்மை. இதில் ஒன்று கூட ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுக்கு தெரியாது. ஜீவ நாடியில் என்ன வருகின்றதோ அதை உரைப்பது மட்டுமே அவர் பணி. நம்மைப் பற்றி முன் பின் தெரியாதவர் வெறும் ஓலையில் சுவாமிகள் கண்களுக்கு மட்டுமே தெரியும் எழுத்தில் இவ்வளவு துல்லிய பலன்களா என்று வாய் விட்டு அழுதார். அடுத்து உன் நோய் நிச்சயம் நீங்கும் என்றும் தந்தைக்கும் சகோதரிக்கும் ஒரு ஆன்ம சாந்தி செய்து கொள்ளவும் என்றும் அதற்காக ஓர் ஆலயம் சென்றாலே போதும் என்றும் அடுத்து வாக்கு வந்தது. அப்படி அந்த குறிப்பிட்ட ஆலய வழிபாடு முடித்தால் உடனடியாக நோய்க்கு ஒரு தீர்வும், பூர்வீகச் சொத்தில் இருக்கும் வில்லங்கம் முடிவுக்கு வரவும், இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்தவளைக் கரையேற்றிவிடுவாய் என்றும், தற்சமயம் இருக்கும் கடன் தீர விடிவு கிட்டும் என்றும் உரைத்த முருகப்பெருமான் இரும்பு சார்ந்த தொழிலே உனக்கு நல்லது என்றார். இதைக் கேட்ட அந்த நபர் இரும்பு தொழிலே செய்வதாகக் கூறினார். இப்படி இன்னும் பல அவர் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியங்களையும் சில வழிபாடுகளையும் சொல்லி ஜீவ நாடி வாக்கை முடித்துக் கொண்டார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள். இங்கு சாந்தி பரிகாரம் என்பது பெரிய செலவு ஏதும் இல்லாத ஆலய வழிபாடே வந்துள்ளது. அவரது மனைவி மிகுந்த அழுகையுடன் ஆசி வாங்கினார். அவரும் ஆசி வாங்கி சுவாமிகள் கைகளிளேயெ திரு நீறு அணிவிக்கச் சொல்லி வணங்கினார். தங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டதாக கண்ணீர் மல்கி விடைபெற்றார்கள். அதற்கு குரு நாதர் அவர்கள் உங்களது பக்தியும் நம்பிக்கையுமே இப்படி துல்லிய வாக்கு வர காரணமாக அமைந்தது. நாம் எப்படி அனுகுகின்றோமோ அப்படியே ஜீவ நாடி நம்மை அனுகும் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். இப்படி தினசரி ஜீவ நாடி மூலம் பல திருவிளையாடல்கள் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் நடந்து வருவது நிதர்ஸன உண்மையாகும்.
                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக