வெள்ளி, 16 நவம்பர், 2018

ஜீவ நாடி- வாசகரின் அனுபவம் - 1




Thamizhan Mediaa எனும் youtube channel ல் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடி குறித்து சில தகவல்களைப் பதிவு செய்திருந்தார்கள். அதன் கீழ் கருத்து தெரிவித்த ஒரு அன்பரின் கருத்து கீழே பதிவு செய்யப்படுகின்றது.
கருத்து:
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி!!! குருஜி வணக்கம், தங்களுடைய இந்த பதிவை கேட்கும்போது முருக பெருமானின் கருணையை சொல்ல வார்த்தை இல்லை உணர்வு பூர்வமாக மட்டுமே அனுபவிக்க முடியும். தங்களிடம் 02.04.2017 அன்று நான் ஆண் வாரிசு வேண்டும் என்று ஜீவ நாடி பார்த்தேன் அதில் முருக பெருமான் ஆண் வாரிசு கிட்டும் என்று வாக்கு கொடுத்து ஒரு ஆலயத்தை பரிகாரமாக உரைத்தார், உரைத்தது போல் 07.03.2018 அன்று விசாக நச்சத்திரம், சஷ்டி திதியில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. முருக பெருமானின் அற்புதங்களை நாம் ஜீவ நாடி வாக்கு கேட்டு, பிறகு நமக்கு நடக்கும் பொழுது நம் கண்களில் சந்தோசம் கண்ணீராய் வரும். மக்களுக்கு வழி காட்டும் தங்களது சேவை முருக பெருமாளின் அருள் ஆசியினால் என்றென்றும் தொடரவேண்டும்.
S.T.மணிகண்டன், சென்னை.
நன்றி: Tamizhan mediaa, Youtube channel

                     ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக