செவ்வாய், 24 ஜூலை, 2018

முருகப்பெருமானின் திருநாமங்களும் பலன்களும்

ஆறுமுகன் - கேட்டதைக் கொடுப்பார்
குகன் - ஞானத்தை நல்குவார்
குருபரன் - குருவருளை சேர்ப்பார்
குணதரன் - நற்சிந்தனையை வளர்ப்பார்
குழகன் - நல் உச்சரிப்பை நல்குவார்
குக்குடி கொடியோன் - அதிகாரம் அளிப்பார்
குறிஞ்சிக்கிழவன் - ஈகையை அளிப்பார்
கந்தன் - கருணையை நல்குவார்
கடம்பன் - நல்வாழ்க்கைத் துணையை அளிப்பார்
கார்த்திகேயன் - பாசத்தைக் கொடுப்பார்
கதிர்வேலன் - காரிய சித்தி அளிப்பார்
காங்கேயன் - பிறப்பை ஒழிப்பார்கங்கை மைந்தன் - பாவம் ஒழிப்பார்
கலையறி புலவன் - கலைஞானம் கொடுப்பார்
கௌரி புத்ரன் - புண்ணியம் நல்குவார்
சரவணபவன் - தஞ்சம் அளிப்பார்
சண்முகன் - சித்திகள் அளிப்பார்
சக்திதாசன் - சிவஞானம் கொடுப்பார்
சக்தி வேலவன் - பெற்றோரைப் பேணிடச் செய்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக