புதன், 19 பிப்ரவரி, 2014

யந்திரங்களின் சக்தி



இனி எந்த முயற்சி செய்தாலும் பயன் கிடையாது என்று கைவிடப்பட்ட

எத்தனையோ நபர்கள் மந்திர சக்தியால் யந்திரங்களின் துணையால் உயிர்

பிழைத்து எழுந்து இருக்கிறார்கள். துன்பத்திற்கு மேல் துன்பம் தொடர்ந்து

வந்து கொண்டிருக்க என்ன காரணம் என்பதை அறியாமல் தவித்த

எத்தனையோ பெரும் செல்வந்தர்கள் முறையாக மந்திரவாதிகளைத்

வரவழைத்து வீட்டில் யாகம் செய்து யந்திரங்களை மண் கலசத்தில் வைத்து

வீட்டில் நான்கு மூலைகளிலும் முறையாக மந்திரம் சொல்லி புதைத்து

வைக்க அந்த வீடுகளில் துன்பம் நிங்கி சுபிட்சம் பெருகி வந்தது.


மந்திரங்களாலும் எந்திரங்களாலும் சாதிக்க முடியாதவை எதுவுமே இல்லை.

வறுமை, நோய் இவை அறவே விலகி இல்லத்தில் ஏற்றம் பெறுவதற்கு

மந்திரங்களோடு கூடிய எந்திரங்கள் அதர்வண வேதத்தில் உண்டு. இதனை

அனுபவம் மிக்கவர்களோடு தயாரித்து வீட்டில் வைத்தால் நமது வாழ்வு

மிகவும் சிறக்கும். சக்கரம்,
யந்திரம் மற்றும் மந்திர உச்சாடனம் இன்று

நேற்று தோன்றியவை அல்ல. வழிவழியாக வந்து கொண்டு இருப்பவை.


பீஜாட்சரங்களின் மூலம் உயிர் பெரும் சக்தியை உருவாக்கும் ‘வித்துக்கள்’

எழுந்து வடிவம் பெறும் போது அதை ஒலி வடிவத்தில் உச்சாடனம் செய்து

ஜெயிக்கலாம்.


எல்லை இல்லாமல் எங்கும் பரந்து விரிந்து வியாபித்து எங்கும் நிறைந்து

காணப்படும் கடவுளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கொண்டு வந்து

பூஜிக்க உதவுவது யந்திரம்// சக்கரம் ஆகும். சக்கரத்தில் வரையப்பட்டுள்ள

கோடுகள் சாதாரண கோடுகள் அல்ல. அவை ஒலிமிக்க கதிர்வீச்சினை

கொண்டவை.

ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்கி வழிபட்டு அந்த தெய்வ

சக்தியை பெறுவதற்க்கு ஒவ்வொரு சக்கரம் உண்டு.அடக்கவே முடியாத

பெரும் சக்தியை உள்ளடக்கிய இந்த சக்கரங்கள் அதிக சக்தி வாய்ந்தவை

ஆகும். இதனை முறைப்படி பூஜை செய்தால் மிக அதிகமான பவர் கிடைக்கும்.

புகழ்பெற்று விளங்கும் திருக்கோவில்களிலுள்ள மூல விக்கிரகங்களின்

பீடத்திற்கு அடிப்பாகத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை பொருத்தி

வைத்தார்கள்.

இவ்விதம் பொருத்தி வைக்கப்பட்ட கோவில்களில் உச்சரிக்கப்படும்

மந்திரங்கள் அனைத்தும் அதிக வல்லமை பெற்று மூலஸ்தானத்தில் ஒலித்து

பின் அது எதிரொலிக்கும் போது இந்தமந்திர ஒலிகளை கேட்கும் பக்தர்கள்

பூரண நலம் பெறுகின்றனர்.


யந்திரங்கள் கோடுகளின் சேர்க்கை அல்ல,.இந்த கோடுகள் அனைத்தும்

ஒன்று சேர்ந்து சுற்றிலுமுள்ள சக்திகளை இயக்க வல்லது. தாயத்து என்ற

பெயரில் மந்திரம் உச்சரிக்கப்பட்ட தகடுகள் அல்லது யந்திரங்கள் குண்டலினி

சக்தியை எழுப்பிவிடும் அற்புத ஆற்றல் படைத்தவை.


தெய்வங்களுக்கு படம் வைத்து வழிபடுவதைவிட யந்திரங்கள்/ சக்கரங்கள்

வைத்து வழிபட்டால் அதன் பலனை உடனே உணரலாம். கணபதி மஹா

யந்திரம் 64 விநாயகரையும் வசியம் செய்யும் சக்தி உடையது. இந்த

யந்திரத்தை பூஜையில் வைத்து விநாயகர் மந்திரம் ஜெபிக்க விநாயகர்

விரைவில் ஆகர்ஷ்னமாகி வசியமாவார்..இதனால் மற்ற தெய்வ சக்திகளும்

எளிதாக வசியம் ஆகும்.

எந்த தெய்வத்தை உபாசனை செய்பவர்களாக இருந்தாலும் மஹா கணபதி

யந்திரம் வைத்து விநாயகர் மந்திரம் ஜபித்துவிட்டு பின் மற்ற தெய்வ மந்திரம்

ஜபித்து வழிபாடு செய்தால் விரைவில் எல்லாம் வசியமாகும்.


நினைத்த காரியம் நடக்கும், தடைகள் அனைத்தும் நீங்கி நாளுக்கு நாள்

முன்னேற்றம் கிடைக்கும்.தொழில் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்க வியாபாரம்

பெருகும். நஷ்டம் உண்டாகாது. செல்வ செழிப்பு, புகழ், ஜனவசியம் உண்டாகி,

லக்ஷ்மி கடாட்சம் பெருகும். இதை போலத்தான் நம்முடைய ஜாதகத்தையும்

யந்திரத்தில் அடைத்து அதாவது ராசிகளின் பீஜ மந்திரங்களை அடைத்து

பிரயோகம் செய்யலாம். எந்த தோஷத்தையும் மாற்றும் சக்தி கொண்டது

யந்திர மந்திர ஜாதகம் சகல யந்திரங்களும் எழுதும் முன் அந்தந்த மந்திர

பிரயோகங்களுக்கு தகுந்தாற்போல், செம்பு, வெள்ளி, தங்கம், பனை ஓலை

என எந்த உலோக தகட்டில் வரைய வேண்டுமோ அதனை குறிப்பிட்ட

அளவுகளில் வெட்டி எடுத்துக்கொண்டு யந்திர தெய்வ, தேவதைகளுக்குத்

தகுந்த நாட்களில் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி போன்ற நாட்களில்

சுபஹோரை பார்த்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எழுதவேண்டும்.


வசிய யந்திரங்கள், தெய்வ யந்திரங்கள், மாரணம், பேதனம், வித்வேசனம்,

உச்சாடனம் போன்ற யந்திரங்க்களை அதற்கு தகுந்த திசையை பார்த்து

எழுதவேண்டும். வசிய யந்திரங்கள் பிரம்ம முகூர்தத்திலும், மற்ற யந்திரங்கள்

இரவிலும் எழுதவேண்டும். யந்திரங்கள் எழுத ஹோரைகள் மிகவும் முக்கியம்

சில யந்திரங்களை சுருட்டிதான் வைக்க வேண்டும் மடித்து வைக்க கூடாது.

பிரயோக யந்திரங்கள் எந்த அளவு வேண்டுமானாலும். வரைந்து

கொள்ளலாம்.

ஆனால் உபாசனை யந்திரங்கள் கொடுக்கப்பட்ட அளவுகளில் வரைந்தால்

தான் பலன் தரும். எழுத்துக்களை தவறாக எழுத கூடாது. யந்திரம்

வரைந்தவுடன் சைவ/ அசைவ பூஜைக்கு ஏற்றாற்போல பலி கொடுத்து 8

விதமான அபிஷேகம் செய்து விபூதியால் துடைத்து மல்லிகை மலர் தூவி

படையல் வைத்து மந்திரம் ஜெபிக்க உரு ஏறும்.


மஹா பெரியவர் ஆதிசங்கரர் பூஜித்து பதித்த சொர்ணா ஆகர்சன யந்திரங்கள்,

ஸ்ரீசக்கரம், மஹா மேரு போன்றவைகளினால் இன்றும் சில கோவில்கள்

மிகுந்த சக்தி உள்ளதாக இன்றும் இருக்கிறது. (திருப்பதி, காளிகாம்பாள்,

மாங்காடு காமாட்சி அம்மன்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக