வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

சரவணபவ என்றால் கிடைக்கும்ஆறு பலன்கள்



"சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும்சிறப்பானதாகும். இதனை

மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), 

எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு 

பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 


முருகன் கோவில்களில் பெரும்பாலும் வேங்கைமரம் தலவிருட்சமாக இருக்கும். 


முருகன் வள்ளி திருமணத்தில் வேங்க மரம் முக்கிய இடம் பெறுகிறது. 

இம்மரம் தனிச்சிறப்பு உடையது. தெய்வீக அருள்பெற்ற மரம். 

முருகனருள் பெற்ற மரமல்லவாப இம்மரத்துண்டுகளை நீரில் நனைய 

வைத்து அந்நீரை வெயிலில் காயவைத்து வெற்றிக்கு இடும் பொட்டு (திலகம்) 

செய்து வந்தார்கள் என்ற குறிப்பும் உண்டு. இது கெடுதல் விளைவிக்காது. 

இந்த நீரை குடித்தால் வலிமையான நோயற்ற உடல்நலம் உருவாகும். 

இம்மரம் பாதுகாப்பு கவசம் போன்றது. 


அறுபடை வீடுகளில் முருகனின் வடிவும், தன்மைகளும்........



திருப்பரங்குன்றம் -நல்துணை வடிவு -உல்லாசம் 

திருச்செந்தூர் - ஒளிவடிவு -மறுபிறப்பின்மை 

பழனி - பழம் (திருவடிவு) -யோகம் 

சுவாமிமலை -சொல்வடிவு -இவ்வுலக சுகம் 

திருத்தணி - கலசநீர் வடிவு -சல்லாபம் 

பழமுதிர்ச்சோலை -மர வடிவு -விநோதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக