செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மகேஸ்வர பூஜை:

                             ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.



திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா

சுவாமிகள் மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க

வைக்கும் என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து

அன்னதானம் செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ

பெருமானுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே

சிவனடியார்களுக்குச் செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை

அறியாதார் யாரும் இல்லை.ஆனால் சிவனடியார்களை அமர வைத்து

அவர்களை சிவனாகவே பாவித்து செய்யப்படும் அன்னதானத்தின்

மகிமையை அனுபவித்து பார்த்தல்தான் தெரியும். எந்த ஒரு லாப

நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.

இது எல்லாப் பரிகாரங்களையும் விட மேலான பரிகாரம் என்று எனது

குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர்

சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள். அத்துடன்

அடியேனிடம் இருக்கும் ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும்

அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக

இருந்தாலும், எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர

பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து

வருகிறோம். கர்ம வினை தீர அன்னதானமே ஒரே வழி. யாருக்கு பிராப்தம்

இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும், பூஜையும் செய்ய முடியும்.


2 கருத்துகள்:

  1. sir i want to see jeeva naadi ur ph# number sir..., kindly email me manoj.traderppp@gmail.com

    பதிலளிநீக்கு
  2. Respected sir
    i am Bamarukmani from theni i want to see jeeva naadi pls your phone number send my mail id rubhagrija5040@gmail.com

    பதிலளிநீக்கு