வியாழன், 20 ஆகஸ்ட், 2020

 அடுத்த நிலைக்குத்தோற்றுவாய்

129வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 129 அடுத்த நிலைக்குத்தோற்றுவாய்

 நூற்பா: 133                             

மூன்றாம் நிலைஇவண் மொழிந்தனம்; முதல்வன்

அருள்நிலை கூறுதும் அறிவுறும் பொருட்டே,

செயல்வகை இயல்பின் மூன்றாம் பிரிவாகிய எதிர்நிலையை இவ்வாறு கூறிமுடித்தோம். மாணவர்கள் நல்லறிவு பெறுவதற்காக அடுத்துப் பரம்பொருளின் அருள்நிலையைக் கூறுவாம் என்றவாறு.

இந்நூற்பாவோடு இப்பிரிவு நிறைவேற்றப்பட்டு அடுத்த பிரிவிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.

நன்றி: பதிவு  புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.



1 கருத்து: