சனி, 8 ஆகஸ்ட், 2020

 உண்மைப் புலவர்களின் நடுநிலை

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

 புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( நடுநிலை) 118

  

நூற்பா: 122                                 

நடுநிலை அனைத்தும் நாமகள் போலும்

கவிஞர்தம் உளத்தில கவின்தரும் அன்றே

ஒருபாற் கோடாமைடாகிய நடுநிலையில் மாண்புகள் யாவும் முற்றிலுமாகக் கலைமகளுக்கு இணையாக உண்மைப் புலவர்களின் மனத்தகத்தே தாமே தோன்றி நிலைபெற்று விளங்கும் என்றவாறு.

 மெய்ப் புலவர்கள் உளத்தில் கவின்தரும் என்றதனானே அருத்தாபத்தியாகப் போலிப்புலவர் நடுநிலைச்சிறப்பை உணரார் என்பது பெறப்பட்டது உளத்தில் கவின்தரும் என்றதனால் அதை வார்த்தைகளால் விரித்துக் கூறவேண்டா என்பதாயிற்று.

இத்துடன் இப்பிரிவு நிறைவு பெறுகிறது.


நன்றி: பதிவு  புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


1 கருத்து: