ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

 மாணிக்க வாசகர் புத்தபிக்குகளை வாதில் வெல்லல்

139 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 142   மாணிக்க வாசகர் புத்தபிக்குகளை வாதில் வெல்லல்

நூற்பா142

வாதிடத் தேடி வரும்எழு மூவரும்

பேசும்நா இன்றிப் பிணம்போல் இருக்கக்

கண்டது அருள்எனக் கழறுதல் றையே.

இலங்கையில் இருந்து தில்லைக்கு வந்து அங்குள்ள சைவர்களை வாதத்தில் வென்று, திருக்கோயிலைத் தமதாக்கிக் கொள்ள விரும்பிய 21 புத்தபிக்குகளைத் தோற்கடித்து ஊமைகளாக்கிய மாணிக்கவாசகரின் வெற்றியையும் இறையருள் எனக் கொள்வதே சிறந்தது என்றவாறு.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

2 கருத்துகள்: