வியாழன், 6 ஆகஸ்ட், 2020

    தோற்றவன் காதை அறுத்தல்    
     பழைய வழக்கம்


வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( நடுநிலை )

116 தோற்றவன் காதை அறுத்தல் பழைய வழக்கம்.
  
நூற்பா: 121    
                         
வெண்பாத் தோல்வியில் விருது இழப்பதுவும்
வண்ணத் தோல்வியில் வார்செவி இழப்பதும்
பழமை யாம்எனல் பல்லோர் வழக்கே.

இதன் பொருள்:

வெண்பாவின் அடிப்படையில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்த புலவன் தான் அதுவரை பெற்றிருந்த சிறப்புப் பட்டங்கள், பல்லக்கு முதலிய விருதுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், அதேபோல வண்ணப் போட்டியில் ஒருவன் தோல்வியுற்றால் அவன் காதுகள் அரியப்பட்டுவிடும், இது பண்டைய மரபு எனப் பலர் கூறுவர் என்றவாறு.

காது கொய்தல் பற்றி இந்நூல் 684, 685 நூற்பா உரைகளில் கூறப்பட்ட செய்திகளை இங்கும் இணைத்துக் காண்க.  

நன்றி:
புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.




நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: