புதன், 5 ஆகஸ்ட், 2020

வீணா தாரிணி ஞான வாகினி

நீலசரஸ்வதி அருளால் மலர்ந்த பாடல்

வீணாதாரிணி ஞானவாகினி
வேதங்கள் புகழ்ந்திடும் கமலவாணி சகலகலாவல்லி (வீணாதாரணி)

உலகுயிர் அனைத்திற்கும் மதி தனை வழங்கிடும்

ஆதிசக்தியின் அம்சமாய் விளங்கிடும்
ஆயகலைகளின் நித்யவாசினி
பரமபவித்ர வித்யாதரி(வீணாதாரனி)

தேவாதி தேவர்கள் போற்றிடும் ஞான ரூபிணி

தவமுனிவர்கள் போற்றிடும்
திரிபுவனதாரிணி

நான்முகன் நாவிலும் தாமரை பூவிலும் அமர்ந்தருளும் அமுதமே

எட்டுத்திக்கிலும் சுடர்ஒளியாக உதித்தருளும் குமுதமே

மலர் திருவடி போற்றி பணிந்திட அருள்மழை பொழியும் ..(வீணா)..

சிவாயநம.

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் குருவே சரணம்.ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்..

    பதிலளிநீக்கு