ஞாயிறு, 16 மார்ச், 2014

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்



1. கடவுள் ஒருவரே. அவர்அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

2. புலால் உணவு உண்ணக்கூடாது.

3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

4. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

7. பசித்தவர்களுக்கு  சாதி,  மதம்,  இனம்,  மொழி  முதலிய  வேறுபாடு  கருதாது உணவளித்தல் வேண்டும்.

8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

10. மத வெறி கூடாது .

எம்மத  நிலையும்  நின்  அருள்  நிலையில்  இலங்குதல்  அறிந்தனன்  எல்லாம்  சம்மதம் ஆக்கிக்  கொள்கின்றேன்  அல்லால்  தனித்து  வேறு  எண்ணியது  உண்டோ?  செம்மல் உன்பாதம்  அறிய  நான்  அறியேன்  சிறிதும்  இங்கு  இனித்துயர்ஆற்றேன்  இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன் எந்தாய்

— திருவருட்பா , ஆறாம் திருமுறை ,3639


அதாவது  எந்த  சமயத்தின்  நிலைப்பாட்டையும்,  எல்லா  மத  நெறிகளையும்  சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

5. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

7. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

8. குருவை வணங்கக் கூசி நிற்காதே.

9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக