ஞாயிறு, 9 மார்ச், 2014

ராகவேந்திரர் உரை



1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்குமுன்

தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.

அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:

• சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

• நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்

• சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு

அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும்

ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.

அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும்

எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ

இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால்

ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை

சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த

அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல்

செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும்.

அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு

நன்மையும் நேராது.


• கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு

நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு

மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை

உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும்.

நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும்

அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.


• இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை

ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில்

அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப்

புரிந்துகொண்ட அவர்சீடர்கள்அவரை சுற்றி பிருந்தாவன சுவர்எழுப்பத்

தொடங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக