சனி, 15 மார்ச், 2014

லட்சுமி நரசிம்மர் மந்திரம்

லட்சுமி நரசிம்மர் 




சிலரது வாழ்வில்பலவிதமான எதிர்பாராத துன்பதுயரங்கள்வாட்டி

வதைக்கும். அது போன்ற சமயங்களில் நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு

மஹா சக்தியின் அனுக்கிரகமே நம்முடைய முக்கிய தேவையாகும். அது

போன்ற சமயங்களில் சமயங்களில் நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில்

நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.


ஓம் நமோ நாரஸிம்ஹாய

வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே 

வஜ்ர தேஹாய வஜ்ராய 

நமோ வஜ்ர நகாய ச 


முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில்

இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய்,

பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை

ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து

நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில்

தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.


வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில்

நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18

முறை உச்சரித்து வர வேண்டும்.அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது

சிறந்த பலனை கொடுக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக