வெள்ளி, 14 மார்ச், 2014

குமார சஷ்டி விரதம்



முருகனைத்தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள்

மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில்

வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார

சஷ்டி விரதம் எனப்படும்.


கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி'

என்றும், `ஆனந்த சுப்பிரமணிய பூஜை' என்றும் கூறுவர். ஆனந்த

சுப்பிரமணிய பூஜை: ஆனந்தன் = நாகம். `சுப்புராயன்' என்ற பெயர்

முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம்.



திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் ஆனந்த (நாக)

சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.

முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம்.அல்லது, இணைந்த இரு

பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த

முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும்

விலகும். நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் அதிகமாக உள்ளது.

இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது.



இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை

வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள்

புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும்

நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக