திங்கள், 26 அக்டோபர், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 34 !







ஜெர்மனிக்காரருக்கு உரைக்கப்பட்ட ஜீவ நாடி

ஜெர்மனியில் இருந்து திரு.ஆனந்த் என்பவர் அடிக்கடி நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்  ஜெகதீஸ்வர சுவாமிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு ஜீவ நாடி படிக்கும்படி கேட்டு வந்தார். நமது குரு நாதரும் ஒரு நாள் தொலை பேசியிலேயே ஜீவ நாடியைப் படிக்குமாறு இறை கட்டளை வந்தவுடன் ஆனந்த் அவர்களுக்கு நாடி உரைத்தார். மிக மிகத் துல்லியமாக ஆனந்த் மட்டுமே அறிந்த ரகசியங்களை நாடியில் முருகப் பெருமான் உரைத்து உனக்கு விரைவில்  நல்ல வேலை கிட்டும் என்றும், உனது சொந்த ஊரிலேயே வேலை கிட்டும் என்றும் இன்னும் ஒரு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உரைத்தார்.

அதே போல் காகம் போல் ஒரு பறவை அடிக்கடி உன்னிடம் வரும் என்றார். முருகப் பெருமான் உரைத்தது போலவே ஒரு மாதத்தில் வேலை அவரது சொந்த நாட்டிலேயே கிடைத்தது. அதே போல் காகம் ஒன்று வந்து அவரிடம் பழக ஆரம்பித்தது. முதல் முறையாக வெளி நாட்டுக்காரர் ஒருவருக்கு ஜீவ நாடி தொலைபேசியில் படிக்கப் பட்டது. இனிமேலும் அவ்விதம் பலருக்குப் படிக்க விரைவில் உத்தரவு வரும் எனவும் நாடியில் உரைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய ஒரு பதிவை  நாடி அனுபவத்தை ஆனந்த் அவர்கள் எழுத உள்ளார்கள். அதுவும் விரைவில் வெளியிடப்படும்.

அதுபோல் நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் மூலம் நட்த்திய திருவிளையாடல்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தை பாக்கியம், 100 க்கும் மேற்பட்ட நடக்கவே முடியாத அளவு இருந்த திருமணம், பலபேருக்கு தொழிலில் அதிரடி மாற்றம், தீராத் நோய் கூட தீர்ந்த அதிசயம் என தினசரி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன.

                எல்லாமே இந்த இணயத்தில் இனி தொடர்ந்து எழுதப்படும்.


                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக