புதன், 28 அக்டோபர், 2015

மாணவ, மாணவிகளுக்கு சிரவை ஆதீனம் பாராட்டு!

 


இசைப்போட்டியில் முதலிடம் பெற்ற மாண, மாணவிகளுக்கு சிரவை ஆதீனம் பாராட்டு விழா  கோவை கணபதி சின்னவேடம்பட்டி கவுமார மடா லயத்தின் ராமானந்த அடிகளார் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான இசைப் போட்டியில் முதலிடம் பெற்றனர். அவர்களை சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்  வாழ்த்தினார். நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும்,  நமது கௌமாரப் பயணம் இணையத்தின் சார்பாகவும் மாணவ மாணவிகளை வாழ்த்தி மகிழ்கின்றோம்.




குறிப்பு: தவத்திரு ராமானந்த சுவாமிகள் சிரவை ஆதினத்தின் முதல் குரு மகா சந்நிதானம் ஆவார். பழநியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று கோவையில் கவுமார மடத்தை ஸ்தாபிதம் செய்தவர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் அவர்கள். அவரது பெயரால் செயல்படும் இந்த பள்ளி மாணவ மாணவியரே இசைப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக