வெள்ளி, 23 அக்டோபர், 2015

கௌமார மடாலயத்தில் திருக்குறள் போட்டி !


                                 சிரவையாதீனம்,தவத்திரு குமரகுருபர சுவாமிகள்.



கோவை சின்ன வேடம்பட்டி கௌமார மடாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டி வருகின்ற நவம்பர் 1இல் நடைபெற உள்ளது.


கணபதி,தமிழ் சங்கம் மற்றும் சிரவை ஆதினம் சுந்தரஸ்வாமிகள் தமிழ் ஆய்வு மையம் சார்பில்,திருக்குறள் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.நடப்பாண்டு,திருக்குறள் ஒப்புவித்தல்,கவிதை,கதை எழுதுதல்,தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

அதேபோல நாட்டு விடுதலைக்காக  உழைத்த 132 தேசிய தலைவர்களின் புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கௌமார மடாலயத்தின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக