ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சிரவை ஆதினம் நடத்திய குடமுழக்கு விழா !





ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 25.10.2015 ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை 8.30 மணிக்கு அங்காளம்மன் ஆலய குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் வருகை தந்து குடமுழுக்கை நடத்தினார்கள். திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி இந்த குடமுழுக்கு கௌமார மடாலய அன்பர்களால் சீரும் சிறப்புமாக தமிழ் முறைப்படி நடத்தப்பட்டது. நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாக நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் அவர்களும் இந்த விழாவிற்குச் சென்று இருந்தார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

                                              ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக