புதன், 21 அக்டோபர், 2015

கவுமார மடாலயத்தில் பயிற்சி: கிராம கோவில் பூசாரிகளுக்கு சான்றிதழ்! ! !




கவுமார மடாலயத்தில் பயிற்சி பெற்ற கிராம கோவில் பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆலய வழிபாட்டு முறைகள் குறித்து கிராம கோவில் பூசாரிகளுக்கு கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி சிரவை ஆதினம் கவுமார மடாலயத்தில் பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெற்றது. 

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பூசாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு தென்னிந்திய புரோகிதர் சங்கதலைவர் ஆற்காடு நரசிம்மஐயர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது சந்தியாவதனம், சுலோகங்கள், அர்ச்சனை, அபிஷேக, அலங்கார முறைகள், நெய்வேத்திய முறை, காயத்ரி மந்திரங்கள், மகா சங்கல்பம், விநாயகர் சங்கல்பம், வாஸ்து பூஜை மற்றும் பஞ்சாங்க முறைப்படி பூஜை முறைகள் குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் கற்றுக்கொடுக்கப்பட்டது.


இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ராமகிருஷ்ணா வித்யாலயா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் தலைமை தாங்கி னார். பயிற்சி குறித்து அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் சவுந்தர்ராஜன் விளக்கி கூறினார். விழாவில், பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடி களார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கிராம கோவில் பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினர். இதுவரை சுமார் 2500 க்கும் மேற்பட்ட பூசாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக பூசாரிகள் பேரவையின் தெரிவித்தனர்.  

                                                                             நன்றி: தினத்தந்தி நாளிதழ்.       


                            ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் ! ! !  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக