வெள்ளி, 16 அக்டோபர், 2015

ருத்ராட்சம் எந்த வகையில் மாறுபட்டது?






பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அதற்கென்று ஒரு அதிர்வு இருக்கிறது. சில குறிப்பிட்ட பொருட்களை, சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக நாம் பயன்படுத்துகிறோம். ருத்ராக்ஷம் மட்டும் இல்லாமல், செடிகள், பூக்கள், மிருகங்கள் என அனைத்தும் நம்மை ஆன்மிக பாதையில் அழைத்து செல்பவை, செல்லாதவை என பிரிக்க முடியும்.

 உதாரணமாக, ஒரு ஆடு – இது சரியான தேர்வு அல்ல. ஆனால் ஒரு காளை, பாம்பு அல்லது ஒரு மயில் சரியான தேர்வாக இருக்க முடியும். ஏனென்றால் இவை சிறிது நுட்பமானவை. ருத்ராக்ஷம் மட்டும் இல்லாமல், செடிகள், பூக்கள், மிருகங்கள் என அனைத்தும் நம்மை ஆன்மிக பாதையில் அழைத்து செல்பவை, செல்லாதவை என பிரிக்க முடியும். ஆன்மிகம் என்று கருதப்படும் அதிர்வுகளை நோக்கி இவை போன்ற ஜீவராசிகள் ஈர்க்கப்படுகின்றன. அதேபோல் புனிதத்தன்மை கொண்ட பல மலர்கள் இருக்கின்றன. ஒரு சில பூக்கள் சிவனுக்கு விருப்பமானது, ஒரு சில பூக்கள் விஷ்ணுவுக்கு விருப்பமானது என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். இந்தப் பூக்களின் அதிர்வுகள் சிவா அல்லது விஷ்ணு என்று நாம் குறிப்பிடும் ஒன்றுக்கு நெருக்கமானவை என்று அடையாள படுத்தப்பட்டவை. இந்த பூக்களை தொட்டாலோ, பெற்றுக் கொண்டாலோ ஒரு தாக்கம் இருக்கும். எனவே குறிப்பிட்ட சில பூக்கள் மட்டுமே ஆலயங்களில் அர்ப்பணிக்கப் படுகின்றன. 

பல விதமான பூக்களின் மீது ருத்ராக்ஷத்தை பிடித்து இதை நிரூபணம் செய்யலாம். ருத்ராக்ஷம் நேர்மறையாக (பிரதக்ஷணமாக) சுற்றினால் அந்த பூ சிவனுக்கு அர்ப்பணிக்க உகந்தது. தாழம்பூவை வைத்து இது போல செய்தால், ருத்ராக்ஷத்திற்கு அந்த பூவை பிடிக்கவில்லை என்பதை பார்ப்பீர்கள். தாழம்பூ சிவனுக்கு முன் பொய் சாட்சி சொன்னதால், சிவனுக்கு அர்ப்பணிக்க தடை செய்யப்பட்டது என்று ஒரு கதை இருக்கிறது தெரியுமா? இந்த கதைகள் எல்லாம் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவை. ஆனால் இதன் சாரம் என்னவென்றால் அதிர்வுகள் ஒத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இணைப்பு உறுதிப்படும். இது போல அனைத்தும் அதிர்வுகளால் அடையாளப் படுத்தப்பட்டன. 

ருத்ராக்ஷம் ஒரு தனித்தன்மையான அதிர்வு கொண்டது. வெறுமனே கையில் அதைப் பிடித்து இருந்தாலே வித்தியாசத்தை உணர முடியும். ஆனால் ருத்ராக்ஷத்தை 3 முதல் 6 மாதங்கள் நீங்கள் அணிந்திருந்தால் உங்கள் உடலோடு அது ஒரு வகையில் கலந்து போயிருக்கும். எனவே ஒவ்வொருவரின் ருத்ராக்ஷமும் வித்யாசமாக இருக்கும். அதனால்தான் உங்கள் ருத்ராக்ஷத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை நீங்கள் பெறுவதோ கூடாது. உங்களுக்கு உகந்த அதிர்வை அது பெற்றிருக்கும். உங்களுடைய ஏதோ ஒன்று அதில் இருக்கும். 

தமிழ்நாட்டில் மற்றவர் கைகளில் இருந்து உப்பு, எள், எண்ணெய் போன்றவற்றை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இது ஏனென்றால், ஒரு சில பொருட்கள், அவை தொடும் எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. குறிப்பாக எலுமிச்சம்பழங்கள் நேர்மறையான, எதிர்மறையான என்று எதையும் உறிஞ்சி விடும். அதனால்தான் ஆலயங்களிலும் அதை உபயோகிக்கிறார்கள். மாந்த்ரீகத்திலும் உபயோகப்படுத்துகிறார்கள். ருத்ராக்ஷதிற்க்கும் இந்த குணம் இருக்கிறது. ஒரு வகையில் உங்கள் உடலின் ஒரு அங்கமாக இது ஆகி விடுகிறது. ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் நீங்கள் 24 நேரமும் அதை அணிந்திருந்து விட்டு ஒரு நாள் அதை கழற்றி விட்டு தூங்க முயற்சி செய்தால் தூக்கம் வராது. உங்கள் உடலின் ஒரு பாகம் இல்லாமல் இருப்பது போல இருக்கும். ஏனென்றால் ருத்ராக்ஷம் உங்களின் பாகமாகி விடுகிறது. 

அதிகப்படியான ஒரு உறுப்பு போல செயல் புரிகிறது. இந்த உறுப்பின் முக்கிய நோக்கம் உங்களுக்கு அருள் கிட்டுமாறு செய்வது. ஏனென்றால் என்னதான் யோகப் பயிற்சிகள், மற்ற ஏதோ செய்தாலும் அருள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு சாத்தியமாக மலர முடியும். அதனால்தான் பக்தர்கள் விரைவில் முக்தி அடைந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வு வரவில்லை என்றால் யோகா வெறும் சர்கஸ் ஆகிவிடும். 

ருத்ராக்ஷம் பற்றிய இன்னொரு விஷயம் அது ஆரோக்கியம் உருவாக்குகிறது. அதிக நாள் வாழ விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அம்சம். எப்படி வாழ்கிறோம் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை, அதிக நாள் வாழ்வதில்தான் விருப்பம். எதற்காக? அவர்களின் சந்தோஷ கருவியை அளந்து பார்த்தல் அது எந்த உயரத்தையும் எட்டி இருக்கப் போவதில்லை. சாவை கண்டு பயம் இருப்பதாலேயே அவர்கள் அதிக நாள் வாழ ஆசைப்படுகிறார்கள். வாழ்வை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதால் குறிப்பிடும்படி எதுவும் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து விடப் போவதில்லை. அடுத்தது என்ன என்பது அவர்களுக்கு தெரியாத ஒன்று என்பதால் இதை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாழ்வில் எது செய்தாலும் – ஆன்மிகம், ஆரோக்கியம், செல்வம், அல்லது அது வேறு எந்த தளமாக இருந்தாலும், அருள் உங்களுக்கு கிடைக்காவிட்டால் வெற்றி உங்களுக்கு வாய்க்காது. விழிப்புணர்வாகவோ, விழிப்புணர்வு இல்லாமலோ நீங்கள் அருள் கிடைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். 

சிறிது அளவாவது அருள் இல்லாமல் ஒரு ஜீவராசியும் உயிரோடு இருக்க முடியாது. ஆனால் விழிப்புணர்வோடு அருளை உங்கள் வாழ்வின் ஒரு பாகமாக ஆக்கி விட்டால் அனைத்தும் எளிதாக, இயல்பாக நடக்கும். வாழ்க்கை உராய்வுகள் இல்லாத ஒன்றாக இருக்கும். ருத்ராக்ஷம் இந்த சாத்தியத்தை மேம்படுத்துகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக