வியாழன், 29 அக்டோபர், 2015

கோவை கௌமார மடாலயத்தில் கந்த சஷ்டி விழா !



மன்மத ஆண்டு ஐப்பசி மாதம் 26ம் நாள் 12.11.2015 வியாழக்கிழமை முதல் கார்த்திகை மாதம் 2ம் தேதி 18.11.2015 புதன் கிழமை முடிய கோவை சரவணம்பட்டி, சிரவணபுரம் கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணிக்கடவுள் திருக்கோவிலில் 57 ம் ஆண்டு லட்சார்ச்சனை, கந்த
சஷ்டித்திருவிழாவானது தவத்திரு சிரவை ஆதினம் குமர குருபர சுவாமிகள் தலைமையில் சீரும் சிறப்பாக நடக்க இருக்கின்றது.

12.11.2015 வியாழக்கிழமை அன்று

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 10 மணிக்கு வேள்வி அருச்சனை, பூசை

மாலை 7 மணிக்கு வேள்வி, மூல மந்திர அருச்சனை, பூசை

13.11.2015 வெள்ளி முதல் 16.11.2015 திங்கள் முடிய 

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 10 மணிக்கும்
மாலை 7 மணிக்கும்  : வேள்வி, மூலமந்திர அர்ச்சனை, பூஜை.

17.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 10 மணிக்கு வேள்வி அருச்சனை, பூசை

பிற்பகல் 2.30 மணிக்கு சண்முக அருச்சனை

மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம், வீரபாகு தூது, சிங்கமுகன், தாராகன் வதம்

இரவு 7.00 மணிக்கு தெய்வானையார் தவசுக் காட்சி

18.11.2015 புதன் கிழமை அன்று

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 9.30 மணிக்கு வேள்வி, சிறப்பு அபிடேகம்

பிற்பகல் 12.00 மணிக்கு தெய்வாணை அம்மையார் திருக்கல்யாணம், பேரொளி வழிபாடு

பிற்பகல் 1.00 மணிக்கு திருமண விருந்து

இந்த விழாவில் நமது கௌமாரப் பயணம் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் வம்சாவளி குரு நாதராகிய சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகளின் குரு அருளையும், தண்டபாணிக் கடவுள் மற்றும் உற்சவர் குமர குருபரக் கடவுளின் அருளையும் பெற்று வாழ்வில் வற்றாத செல்வமும், வளமும் பெற்று வாழும் படி நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கலை அரசு அந்தியூர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

                             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

அழைப்பிதழ்


நிகழ்ச்சி நிரல்


1 கருத்து: