திங்கள், 2 நவம்பர், 2015

ஜீவ நாடி உரைத்த சஷ்டி விரதம்!



மன்மத ஆண்டு ஐப்பசி மாதம் 26ம் நாள் 12.11.2015 வியாழக்கிழமை முதல் கார்த்திகை மாதம் 2ம் தேதி 18.11.2015 புதன் கிழமை  வரை கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கின்றது. நமது குரு நாதரான ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் இன்று காலை ஜீவ நாடி படித்து  நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக முறையாக சஷ்டி விரதம் இருக்கும் வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார். முருக பகதர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ளவும்.

1. தீபாவளிக்கு மறு நாள் வருகின்ற அமாவாஸை அன்று ஏதாவது ஒரு முருகன் அடியாரிடம் சென்று ஆசி வாங்கி காப்பு என்று சொல்லப்படும் கங்கணத்தை வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் அமாவாஸை அன்று இரவு நடக்கும்
பூஜையில்  நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் இந்த காப்பை கட்டி விடுவார்கள். அதே போல் கோவை கவுமார மடத்தில் உள்ள தண்டபாணிக் கோவிலில் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தலைமையில் இந்த காப்பு கட்டுதல் நடக்கும். இது போன்ற வாய்ப்புகளைப் பக்தர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.



படம்: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களுடன் நமது குரு நாதர் 


ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.

2. காப்பு கட்டிய பின்பு பிரதமை திதி முதல் விரதம் ஆரம்பம் ஆகின்றது. அதுமுதல் மதியம் ஒரு வேளை மட்டும் எளிய சைவ உணவை உட்கொண்டு மற்ற இரண்டு வேளைகளில் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இது போல் பஞ்சமி திதி வரை விரதம் இருக்க வேண்டும். ஆறாவது நாளான சஷ்டி திதியில் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருந்து அன்று இரவு தூங்காமல் கண் விழித்து கந்தன் புகழையும் கந்தன் அடியார்கள் புகழையும் பாட வேண்டும்.

நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளின்
முதல் உபதேச குரு தவத்திரு வேலுச்சாமி சுவாமிகள் அவர்கள் கடந்த 50 ஆண்டு காலமாக வெள்ளிக்கிழைமை விரதம் இருப்பவர். அவர் ஒவ்வொரு வெள்ளியும் தூங்காமல் விழித்திருந்து வருகிறார்.


படம்: தவத்திரு வேலுச்சாமி சுவாமிகள் அவர்களுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.



3. சஷ்டி அன்று மாலை திருச்செந்தூரில் நடக்கும் சூர சம்ஹார காட்சியை, அருகில் உள்ள முருகன் ஆலய சூர சம்ஹார காட்சியை அல்லது நமது கோவை கௌமார மடத்தில் நடக்கும் சூர சம்ஹார காட்சியை கண்ணினால் காண வேண்டும்.  நேரில் காண முடியாதவர்கள் தொலைக்காட்சியிலாவது காண வேண்டும். கண்ணினால் நல்ல காட்சியக் காணவே நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்துள்ளோம் என்று அடிக்கடி சிரவை ஆதீனம்
தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் பேசுவார்கள் என்று நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு மகிழ்வார்கள்.




படம்: தவத்திரு ஓம் நமசிவய காசி வாசி சுவாமிகளுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.

4. சஷ்டிக்கு அடுத்த நாள் முருகன் ஆலயங்களில் நடக்கும் திருக்கல்யாணக் காட்சியைக் காண வேண்டும். திருக்கல்யாணம் முடித்த பின்பு காப்பை அவிழ்த்துக் கொள்ளலாம்.

5. அதேபோல் பிரதமை முதல் திருக்கல்யாணம் வரைக்கும் தினசரி காலையில் கந்தர் கலி வெண்பா எனும் பாடலையும், மாலையில் சிரவை ஆதீனக் குரு முதல்வர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் பாடிய சண்முக மாலை எனும் பாடலையும் பாராயணம் செய்ய வேண்டும் என்று ஜீவ நாடி அருள் வாக்கில் விசேஷமாக வந்துள்ளது.

6. சஷ்டி விரதம் இருக்கும் இந்த நாட்களில் அதிக கோபம், அதிக பேச்சு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் கந்தன் அடியவர்களின் குரு பீடங்களை அதிகம் தரிசனம் செய்ய வேண்டும். முருகன் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மந்திர உபதேசம் வாங்கியவர்கள் தனது குரு ஆசியைப் பெற்று இந்த நாட்களில் அதிகமாக ஜபம் செய்ய வேண்டும்.

கொங்கு நாட்டில் இருப்பவர்களுக்கு கவுமார மடத்தில் உள்ள முதல் மூன்று ஆதினங்களின் ஜீவ சமாதிக் கோவில்கள் வழிபாடு மிகவும் சிறப்பு. சென்னையில் இருப்பவர்களுக்கு திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி பீடமும், திருபோரூர் சிதம்பர சுவாமிகள் திருச்சமாதி பீடமும் சிறப்பானவை. திண்டுக்கல் மாவட்டக்காரர்கள் பழநியில் உள்ள பட்டணம் சுவாமிகள்
பீடத்தில் வழிபடலாம். வேலூர் பகுதிக்காரர்களுக்கு வள்ளிமலையில் உள்ள வள்ளிமலை சுவாமிகள் சமாதி பீடம் சிறப்பு வாய்ந்ததாகும். இவை அனைத்துமே ஜீவ நாடியின் வாக்கு ஆகும்.

7. 100 ஆண்டுகளுக்கும் மேல் முருகனது மதமான கவுமாரத்தை கடைபிடிக்கும் குருபீடம் கோவை கவுமார மடமான சிரவை ஆதினம் மிகவும் சிறப்பானதாகும். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுக்கு இந்த கவுமார மடத்துடன் முன் ஜென்ம தொடர்பு உள்ளதாக திருவண்ணாமலை மீனாட்சி நாடி உரைத்திருப்பதால் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுக்கு தற்போதுள்ள சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் மீதும், கவுமார மடத்தின் மீதும் அளவு கடந்த ஈடுபாடும், பற்றும், பக்தியும், அளவிலாத அன்பும் ஏற்பட்டுள்ளது.


படம்: திருவண்ணாமலை மீனாட்சி நாடி தவத்திரு. ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்கள் 

8.  நோய் வாய்ப்பட்டவர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் கடுமையான விரதம் இருக்கத்தேவையில்லை. பெண்கள் கணவணின் அனுமதியோடு விரதம் இருக்கலாம்.

9. இதில் எதுவுமே கடை பிடிக்க முடியாதவர்கள் முருகனின் புராணங்களியாவது படிக்கலாம் அல்லது முருகன் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

10. வாழ் நாள் முழுதும் கொல்லாத, புலால் உண்ணாத விரதம் இருந்து வாழ்வில் ஒருமுறையேனும் கோவை கௌமார மடத்தையும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுடைய சீரிய உபதேசம் ஆகும்.

இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த மண்ணில் கண்ட மனிதப் பிறவிக்கு ஒரு நற்செயல் செய்த புண்ணியம் கிடைக்கும்.  நமது கர்ம வினைகள் கரையும். கந்தன் திருவருள் கிட்டும்.

வாழ்க்கையில் பல அதிசய மாற்றங்கள் 100% ஏற்படும். குரு அருள் இல்லையேல் குமரன் அருள் இல்லை, குமரன் அருள் இல்லையேல் குரு அருள் இல்லை என்பது ஜீவ நாடி வாக்கு.

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                              சிரவை ஆதினத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக