சனி, 30 மே, 2020

ஜீவ நாடி அருளாடல்கள் பகுதி 1

எனது குருநாதர் எலுமிச்சம் பழத்தை வைத்தே திரிகால வர்த்தமானங்களைத் திறம்பட உரைத்துவிடுவார். ஒருமுறை அடியேன் எலுமிச்சம்பழத்தை நேரடியாகச் செடியில் பறித்தேன். நறுக்கென முள் தைத்தது. சரி என விட்டுவிட்டேன். அந்தப் பழத்தைக் கொண்டு போய் குருநாதரிடம் பூஜைக்குக் கொடுத்துவிட்டேன். இரவு பூஜைகளை முடித்து அருள்வாக்கு சொல்ல அமர்ந்தார் குரு. இரவு 2 மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். என்னை அருள்வாக்கில் அழைப்பதாக வந்து அழைத்துச் சென்றார்கள். அடடா தூங்கி விட்டோமோ என்று பரபரப்பாக எழுந்து குருவின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். குரு கேட்ட கேள்வி என்னை மெய் சிலிர்க்க வைத்த்து. என்னப்பா இந்த எலுமிச்சம் பழம் பறிக்கும் போது முள் ஏறியதோ? அது இன்னும் வலிக்கிறதா?

கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,    ஸ்ரீ  ஞானஸ்கந்த மூர்த்தி 
கௌமாரபீடம், அந்தியூர்.

3 கருத்துகள்: