வெள்ளி, 10 ஜூலை, 2020


தமிழின் ஆற்றல் 



85 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

புலமை இலக்கணம்-மரபியல்பு
             
85   தமிழின் ஆற்றல் 

நூற்பா: 90                             

செழியன் மனையொடு சிவிகை தாங்கவும்
கழகப் பலகை கண்டு மறையவும்
சிலைத்தலை அசையவும் செப்பும் புலமை
பொய்யா மொழியினது என்னும் புவியே,

பொய்யாமொழிப் புலவரின் கவிதையாற்றல் தன்னைப் பல்லக்கிலேற்றிப் பாண்டியன் அவன் மனைவியோடு சுமக்கச் செய்தல், பொற்றாமரைக் குளத்திலே தோன்றாதிருந்த பழைய சங்கப்பலகை  வெளிப்பட்டு மீண்டும் மறைதல், மண்டபத்திருந்த சங்கப் புலவரின் கற்சிலைகள் தம்மோடு இவர் ஒத்தவர் என்று ஒப்பித் தலையசைத்தல் போன்ற அதிசயங்களைச் செய்யவல்லது என்று மக்கள் மொழிவர் என்றவாறு.
இவ் வரலாறுகளும் புலவர் புராணத்திலும் தனிப்பாடல்களிலும் உள்ளன.


நன்றி: பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: