வெள்ளி, 17 ஜூலை, 2020

திரைச்சீலையின் கயிறுஅற்று விழச்செய்ததும் தமிழே


92  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   
   
   புலமை இலக்கணம் - மரபியல்பு
  
   92  திரைச்சீலையின் கயிறுஅற்று விழச்செய்ததும்தமிழே

நூற்பா: 97                         

மணிநா வொடுதிரை மறைவுஅற ஒருவன்  கவிதை பாடிக்
களித்திருந் தனனே
திருமந்திரத்தூர் எனப்படும் தூத்துக்குடிக் கோயிலின் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த மணியின் நாக்கும், திருச்செந்தூர்ச் சந்நிதானத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் கயிறும் அற்று விழும்படி வீரபாண்டியப் புலவர் செந்தமிழ் பாடி மகிழ்ந்திருந்தார் என்றவாறு,
இந்நிகழ்ச்சிகள் புலவர் புராணம் வீரபாண்டியப்புலவர் சருக்கத்தில் உள்ளன.

நன்றி:
பதிவு: தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக