வியாழன், 2 ஜூலை, 2020


ஔவைப்பிராட்டியின்  சிறப்பு

79 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

புலமை இலக்கண- மரபியல்பு 

  79 ஔவைப்பிராட்டின்  சிறப்பு

நூற்பா: 84                                
படுபலா உருள்பனை பழம்தரப் பைந்தமிழ்
பாடிய கிழவியும் பழுதுஇலா தவளே
வெட்டப்பட்ட பலா மரமும், துண்டிக்கப்பட்டு உருளும்  84

இதன்பொருள்:
பனங்கட்டையும் தளிர்த்துக் கனி தருமாறு தமிழிசைத்த ஒளவையாரும் குற்றமற்ற புலமைச் சிறப்புடையவள் ஆவாள் என்றவாறு.

விளக்கம்:
இந்நூற்பா ஒளவையார் பாடல்களாக வழங்கப்படும், “கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா”, “கூழைப் பலாத் தழைக்க”, “திங்கட்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்” என்னும் தனிப்பாடல்களைப் பற்றிய வரலாறுகளை ஒட்டி எழுந்தது.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.




நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


1 கருத்து: