புதன், 22 ஜூலை, 2020

அங்கயற்கண்ணியே! அன்னை மீனாட்சியே!


பாண்டியன் வம்சத்தில் பார்வதி அம்சத்தில் அவதரித்தாய் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே.. (பாண்டியன்)

நவரத்ன பீடம் நின்று பூங்கிளி கையில் கொண்டு ராஜமாதங்கியாய் காட்சி தருவாள் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே..(பாண்டியன்)

குருபரரை பேசவைத்தாய்
பிள்ளைத் தமிழ் ஏற்றுவித்தாய்
பத்திரருக்கு பாசுரம் தந்தாய்
நக்கீரருக்கு அருள்புரிந்தாய் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே..

நரிகளை பரியாக்கினாய்
வாதவூராரை மணிவாசகனாக்கினாய் திருவிளையாடல் தினம் புரிந்தாய் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே.. (பாண்டியன்).

சிவாயநம!

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.ஓம் குருவே சரணம்...

    பதிலளிநீக்கு