ஞாயிறு, 5 ஜூலை, 2020

நக்கீரர் 999 புலவர்களை விடுவித்தல்


81வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்    
  
புலமை இலக்கணம் - மரபியல்பு
         
81 நக்கீரர் 999 புலவர்களை விடுவித்தல்.

நூற்பா: 86                             

தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்பது
மாதவர் தன்னொடு மாளா வண்ணம்
ஒருதமிழ்ப் புலவன் உரைபயின் றானே. 86

திருப்பரங்குன்றக் குகையில் கற்கிமுகி எனப் பெயருடைய பூதம் தான் உண்பதற்காக அடைத்து வைத்திருத்த 999 பேர்களுடன் தாமும் இறந்துவிடாதவாறு நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடினார் என்றவாறு.


நன்றி:பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர்,தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: