வியாழன், 16 ஜூலை, 2020

அன்னை மீனாட்சியே!



பிறை மதி சூடி நின்று
பூங்கிளி கையில் கொண்டு
மரகதப்பாவை ஆட்சிபுரிவாள்
அந்த அழகிய மதுரையில் காட்சி தருவாள் (பிறை)

முத்தமிழ் கோவில் சென்று
மூன்று கோடி சிற்பம் கண்டு
வைரமுடி தரித்து ஆட்சிபுரிவாள் - அந்த அழகிய மதுரையில்
காட்சி தருவாள்(பிறை)

சொற்பதம் மாலை சாற்ற
பொற்பதம் பணிந்து போற்ற
இருசுடர் விழியால்
ஆட்சி புரிவாள் அந்த
அழகிய மதுரையில் காட்சி தருவாள்(பிறை)

கொடுநோய்களை தீர்க்க
மாமருந்தாகி உலகினை காக்க
சொக்கனை தன்னில் கொண்டு ஆட்சிபுரிவாள்
அழகிய மதுரையில் காட்சி தருவாள்(பிறை).

சிவாயநம!

ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்,
தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் குருவே சரணம்.ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்..அன்னை மீனாட்சியே போற்றி

    பதிலளிநீக்கு