ஞாயிறு, 12 ஜூலை, 2020

சிவப்பிரகாசர் இட்ட சாபம்


89 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

புலமை இலக்கணம்-மரபியல்பு 

 89  கை விலங்கு ஒடித்தது

நூற்பா: 94     
                     
வெள்ளியால் சமைத்த விலங்கு முறிபடத்   தெள்ளிய                          பனுவல் செப்பினன் ஒருவனே.

இதன்பொருள்:

வடமலையப்ப மன்னனால் இடப்பெற்ற வெள்ளிக் கைவிலங்கு தறித்துப்போகுமாறு சிறைவிடந்தாதி என்னும் திருச்செந்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதியைத் தென்குருகையூரைச் சேர்ந்த ஒரு வைணவர் பாடினார் என்றவாறு. இவ்வரலாறு புலவர் புராணம் இருவயிணவர் சருக்கத்தில் முதல் 29 கவிகளில் கூறப்பட்டுள்ளது. இச்சிறைவிடந்தாதி அண்மையில் அச்சாகியுள்ளது.


நன்றி: பதிவு
தொல்காப்பியர் தொண்டன் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், உலகத்தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர  சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: