ஞாயிறு, 26 ஜூலை, 2020

அம்பிகை நேரில் வருவாள்


அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்
அழகரின் தங்கை வருவாள் அழகிய தேரில் அன்னை மீனாட்சி எழுந்தருள்வாள்

கோல விழியும் குரு நகையும் பிறை நிலவும்
சிவவடிவில் விளங்கிடும்
எழிலரசி அனுதினமும் அடியவர் காண
அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்

முப்பெருந்தேவி என்று உயர்மறைகள் போற்றுமே
ஐம்பூத கோள்கள் உனைப் பணிந்து பணியாற்றுமே
தமிழ் போற்றும் தேவாரம் திருவாசகம் இவையாவும் தாயே உன் பதம் போற்றுமே

செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் தாயே
தரணியை காத்தருளும் நாயகி நீயே

தீமை விலக நன்மை பெருக ஞானம் விளைய நலம் பல பெருக
ஆதவன் தொழும்  பேரொளியை தினம் துதித்து உடன் அழைக்க

அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்
அழகரின் தங்கை வருவாள்
அழகிய தேரில் அன்னை மீனாட்சி எழுந்தருள்வாள்.

சிவாயநம!

நன்றி
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்,
தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.ஓம் குருவே சரணம்

    பதிலளிநீக்கு