செவ்வாய், 7 ஜூலை, 2020


ஆறு  வழிமாறவும் கல்உரு
மகிழவும் செய்த தமிழ்.

82 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

 

புலமை இலக்கணம் -மரபியல்பு

82 ஆறுவழிமாறவும் கல்உரு மகிழவும் செய்த தமிழ்.

நூற்பா: 87                                

வேறுஇடத்து ஆறு விலகி ஓடவும்
கல்உரு மகிழவும் கவிதை பாடினர்
இருபுல வோர்என்று இயம்புநர் பலரே.

தாம் பாடிய திருவாமாத்தூர்க் கலம்பகக் கவிக்கேற்ப அவ்வூரில் பம்பையாறு வழிமாறிச் செல்லும்படியும், ஒரு குளக் கரையில் இருந்த விநாயகரின் கற்சிலை தம் பாடலால் மகிழும் படியும் இரட்டைப் புலவர்கள் பாடினர் என்றவாறு

இவ் வரலாற்றைப் புலவர் புராணம் இரட்டைப் புலவர் சருக்கத்தில் காணலாம். கல்லுரு மகிழப் பாடியது “தம்பியோ பெண்திருடி” எனத் தொடங்கும் தனிப்பாடல் .

நன்றி: 
பதிவு புலவர் ஆ.காளியப்பன்அவர்கள், தலைவர், தொல்காப்பியர்
தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


1 கருத்து: