ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஆடும் கூத்தனே!



ஆடும் கூத்தனை காண வேண்டும் - அவன்
ஆடும் கூத்தினை காண வேண்டும்  - அம்பலத்தே
ஆடும் கூத்தனை காண வேண்டும் - அவன்
ஆடும் கூத்தினை காண வேண்டும்

அவனருளால் அதைப் பாட வேண்டும் - அவன்
அழகினைப் பாடி ஆடிட வேண்டும் - அவன்
அடியார்கள் ஒன்றாய்க் கூடிட வேண்டும் - கனக
சபையில் நின்றாடும் கூத்தனை காண வேண்டும்
அவன் ஆடும் கூத்தினை காணவேண்டும்

இமயவெளியில் ஆடும் பரம்பொருளை
இதய வெளியில் காணும் வரம் அருள வேண்டும்
திங்கள்முடி கொண்டு அதில் கங்கைநதி உண்டு
நன்மங்கை இடங்கொண்டு ஆடும் கூத்தனை காண வேண்டும் அவன் ஆடும் கூத்தினை காணவேண்டும்

அண்டத்தில் உள்ளதெல்லாம் அகத்தினில் காட்டியவன்
ஆர் உயிர்க்கெல்லாம் அமுதினை ஊட்டியவன்
அன்பே சிவம் என்று அவனியில் நாட்டியவன்
அஞ்செழுத்து அம்பலத்தில் ஆடும் கூத்தனை காண வேண்டும் அவன்
ஆடும் கூத்தினை காணவேண்டும் ..

சிவாயநம!

நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா @ ஈஸ்வர்,
தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்..ஓம் குருவே சரணம்

    பதிலளிநீக்கு