வெள்ளி, 1 செப்டம்பர், 2017

ஜீவ நாடி உரைத்தபடி செய்யும் தீப விழா அழைப்பிதழ் 05.09.17

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் காரைக்குடி அகத்தியர் திருமகன் அவர்களுக்கு முருகப்பெருமான் உரைத்தபடி உலக நன்மைக்காக பஞ்சபூத தலங்களில் 1008 சக்திகள தீப வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மண் தலமான காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் வருகின்ற 5.9.2017 செவ்வாய்க்கிழமை முழுமதியன்று மாலை 5.45 மணிக்கு தீப வழிபாடு நடக்க உள்ளது. முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்து செய்யப்படும் தீப விழா என்பதால் இதில் கலந்து கொள்பவர்களுக்கு இறைவன் அருள் கிட்டும் என்பது திண்ணம். தாங்கள் எது குறித்து நன்மைக்காக பிரார்த்தனை செய்தாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஜீவ நாடி அருள்வாக்காகும். பிராப்தம் இருக்கும் நமது கௌமாரபயணம் வாசகர்கள் இந்த தீப விழாவில் கலந்து கொண்டு அம்மை அப்பன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                அழைப்பிதழ்

தொடர்புக்கு: ஸ்ரீஅகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழு மதுரை மற்றும் காரைக்குடி
செல்: 9994635716

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக