வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மலேசியா முருக பக்தர்கள் பாராட்டு

முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு மலேசியா முருக பக்தர்கள் பேரவை மற்றும் அருணகிரிநாதர் மன்றம் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கௌமார மடாலயமும் சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களும் எடுக்கும் இந்த அதி உன்னத முயற்சிக்கு தாங்கள் உறுதுணையாக இருந்து எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்புத் தருவதாகவும் சுவாமிகளிடம் தெரிவித்து இந்த நிகழ்வு முருகனின் அருளால் நடக்கின்றது என்றும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதை சுவாமிகள்  நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நல்ல செய்தியை நமது கௌமாரபயணம் முருக பக்தர்களுக்கும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். வருடம் தோறும் மலேசியாவில் நடக்கும் அருணகிரிநாதர் விழாவில் நமது சிரவையாதீனம் சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                                            www.kaumaramutt.com


படங்கள்: மலேசியாவில் அருணகிரி நாதர்விழா

வேண்டுகோள்: மலேசியா மக்கள் அருணகிரிநாதர் மகிமை தெரிந்து விழா எடுக்கின்றார்கள். நாமும் நிச்சயம் அருணகிரி நாதருக்கு ஊர் தோறும் விழா எடுக்க வேண்டும். திருப்புகழை வீதிகள் தோறும் பாடி தமிழ்க்கடவுளாம் முருகனை தமிழால் பாடி அருள் பெற அனைவரும் ஒன்று கூடுவோம். நன்றி!

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்தஉபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம் அந்தியூர். 

                           ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                                 சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக