புதன், 6 செப்டம்பர், 2017

ஆறெழுத்தலங்காரம் பகுதி-1

வைகொண்ட வேலன்றன் ஆறுஎழுத்து
  ஓதின் மனம் குவியும்
பொய்கொண்ட மாயை எல்லாம் பொடி
  ஆகும் புகழ்மலியும்
கைகொண்ட மட்டும் கொடுத்துக்
  களிக்கும் கருணை உண்டாம்
மெய்கொண்ட சித்தி எட்டும் தனி
  வீடும் வெளிப்படுமே
                       -ஆறெழுத்தலங்காரம்
கௌமார குரு நாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் தமது ஆறெழுத்தலங்காரம் எனும் நூலில் பாடிய பாடல் இது. முருகனது ஆறெழுத்து மந்திரத்தை ஓதி வந்தால் மனம் ஒன்று குவியும். பொய்யாகிய மாயை எல்லாம் பொடிப் பொடியாய்ப் போய்விடும். புகழ் வரும். எவ்வளவுக்கெவ்வளவு ஓதுகின்றோமோ அந்த அளவு கை கொடுத்து இன்பம் தரும். இறைவனது கருணை கிட்டும். உண்மையாகிய எட்டு சித்திகளும் பேரின்ப தனி வீடும் வெளிப்படும் என்பது இதன் பொருள்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
             www.kaumaramutt.com

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக