வெள்ளி, 8 செப்டம்பர், 2017

சஞ்சீவினி யோகா & இயற்கை பாத அழுத்த சிகிச்சை மையம் துவக்க விழா

07.09.2016 வியாழன் மாலை கோவை ஹோப் காலேஜ் அருகில் உள்ள காமராஜர் சாலையில் சஞ்சீவினி யோகா & இயற்கை பாத அழுத்த சிகிச்சை மையம் துவக்க விழா இனிதே நடந்தது. இந்த விழாவில்
சித்தஸ்ரீ யோகா குரு பதஞ்சலி ஈஸ்வரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள், இந்து மக்கள் கட்சி மாநிலத்தலைவர் திரு.அர்ஜீன் சம்பத் அவர்கள், அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் திரு. ஜெகதீஸ்வரன் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பதினெண் சித்தர்கள் படங்களைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். சஞ்சீவினி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் ப.யோகநாதன் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. 


                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக