வியாழன், 21 செப்டம்பர், 2017

சிந்தையில் துன்பு இலையே முருகா !


திருக்கோவலூர் ஞானியார் சுவாமிகள் அருளிய இன்னுமொரு பாடலைப் பார்ப்போம்.
பாடல்:
மந்திரம் ஆறும் மனக்குடியா வைத்து வாழ்பவர்கள்
சிந்தியில் துன்பு இலையே முருகா செனனங்கள் தொறும்
வந்து அமர் ஆடிய மால் இலையே; மனவாசிதனைச்
சந்ததம் சாரி நடாத்த என்றாலும் தடையில்லையே.
பொருள்:
ஆறெழுத்து மந்திரத்தை அகத்தில் வைத்தவர்களுக்கு என்றும் துன்பம் இல்லை. பிறவிகள்தோறும் வந்து போராடச் செய்த அறியாமையும் இல்லை. மனமாகிய குதிரையில் எப்போதும் நினை நோக்கிச் சவாரி செய்யவும் தடை இல்லை என்பது பாடலின் கருத்து.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                    
படம்: பவானி கூடுதுறை காவிரி புஷ்கர விழாவில் சிரவை ஆதீனம் மற்றும் பேரூர் ஆதீனம்
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக