புதன், 10 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 5


ஜீவநாடி பல உண்மைகளைப் புலப்படுத்தி வைத்துவிடும்.

ஆனால் எதை எங்கு
பயன்படுத்த வேண்டுமோ அங்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து குறிப்பறிந்து வெளியிட வேண்டும்.

சித்தர்கள் பலர் சூட்சுமமாக ஜீவ நாடியில் அருள்வாக்கு சொல்லுவதால் அவர்கள்
சம்பந்தமாக ஏற்படும் சகுனங்கள், நிமித்தங்களைக் கவனித்தால்
100% துல்லிய பலன்களைச் சொல்ல முடியும்.

ஜீவ நாடியும் ஜோதிடத்தை விட்டு விலகி எதையும் சொல்வதில்லை.
மனிதனின் ஜாதக ரீதியாகவே பலன்களைச் சொல்லும்.

சித்தர்கள் சொல்வதால் கிரகங்களின் தாக்கங்களிலிருந்து தப்பிக்கின்ற வழிமுறைகளை
ஏராளமாகச் சொல்வார்கள்.

பொதுவாக ஆலய வழிபாடுகளையே
பரிகாரமாகச் சொல்வார்கள்.

ஒரு சில நேரங்களில் சில மூலிகைகளைப் பற்றியும்
அதைப் பயன்படுத்தும் வித்தையும் சொல்வார்கள்.

சில நேரங்கள் யந்திரங்கள் பற்றியும், மந்திர ஜபம் பற்றியும் சொல்வார்கள்.

நமது ஞானஸ்கந்த ஜீவ நாடியின் மணி மகுடமாக நாங்கள் கருதுவது
உபாசனை மார்க்கம்.

நெற்றியில் அடித்தது போல் வருகின்ற உபாசனை முறைகள்
உறுதியான பலன்களைத் தந்து உயர் வாழ்வை பலருக்கு தந்து
கொண்டிருக்கிறது.



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

5 கருத்துகள்:

  1. அனைத்தும் உண்மை.எம் முன்னோர்கள் செய்த நற்பலன்களால் எமக்கு முருகன் அருள், லோபமுத்ரா சமேத அகத்தியர் அருள் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உபாசனை போன்ற மார்க்கத்தை எனக்கும் அனைவருக்கும் அருளி என் போன்றவர்களை வழிநடத்தும் என் ஆசானே வழி காட்டி குருவே போற்றி. ஓம் ஸ்ரீ ஜெகதீஸ்வராய நமஹ

      நீக்கு