வியாழன், 18 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 8


பொதுவாக ஆலய பரிகாரங்களே பரிந்துரை செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சில மாதங்களோ, சில வருடங்களோ ஜீவ நாடி
சொல்கின்ற ஆலயங்களை விடாமல் தரிசனம் செய்ய
வலியுறுத்தப்படுகிறது.

அந்த ஆலய தரிசனத்தை முறையாகச் செய்யும் போது அந்த ஆலயத்தில் ஏதேனும்
அதிசயம் நிகழ வேண்டும்.

அப்படி நிகழும் வரை அந்த ஆலயத்தைத் தொடர்ந்து வழிபட வேண்டும்.

என்ன அதிசயம் எனில் நமது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு ஏதேனும் அங்கு நடக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த இறைவனின் பார்வை நம்மீது விழுந்து
விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும்.

அதன் பின்பு ஜீவ நாடியில்
அதற்கான சூட்சும இரகசியங்களும், அந்த அதிசயத்தின் முழு செயல்களும்
விளக்கமாக வரும்.

அதன் மூலம் அந்த அதிசயத்தை மனப்பூர்வமாக முழுமையாக
அறிந்து கொள்ளலாம்.

நமது ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடம் சொல்வது போன்று 12
வீட்டின் பலன்களை ஒரே முறையில் சொல்லி விடுவதில்லை.

ஜீவநாடி என்பதே அப்போதைக்கு அப்போது தோன்றி மறைகின்ற எழுத்துக்களை வைத்து
 உரைக்கப்படுவது.

எனவே முருகப்பெருமான் என்ன உரைக்க நினைக்கிறாரோ,
அதை மட்டுமே படிக்க முடியும். நாம் எதிர்பார்த்ததுதான் வர வேண்டும்
 என்று எதிர்பார்க்க முடியாது.

முருகனது எண்ணம் எதுவோ
அதுவே நாடியில் வரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளி கழித்து மீண்டும் கேட்க
வேண்டிய தேதியையும் முருகனே நாடியில் உரைத்து விடுவார்.

 அந்த குறிப்பிட்ட காலம் வரை முதல் முறை உரைக்கப்பட்ட
பலன்களையும், பரிகாரங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

அதில் பல மாற்றங்கள்
ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம்.

அடுத்த முறை எந்த
குறிப்பிட்ட தேதியில் கேட்கச் சொன்னாரோ அப்போது
அடுத்த இரகசியங்களை உரைப்பார்.

மீண்டும்  ஒரு தேதி சொல்லி வரச்
சொல்லுவார். இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு
ஒரு முறையோ தொடர்ந்து ஜீவ நாடியில் வாக்கு ஒரு
குறிப்பிட்ட நபருக்கு வந்து கொண்டே இருக்கும். எனவே ஒரே நாளில் ஒரே மூச்சில் முழுவதும்
இங்கு உரைக்கப்படுவதில்லை.

அதேபோல் முதல் முறை சொன்ன ஆலயப் பரிகாரங்களை முறையாகக் கடைபிடிக்காமல்
இரண்டாம் முறை பலன் வருவதில்லை.

எனவே ஜீவநாடியில் வருவதை
முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் கடைப்பிடித்து
வந்தால் முருகப் பெருமானும், சித்தர்களும், நமது வாழ்வில் நடத்தும் அதிசயங்களை
அனுபவிக்கலாம்.

எமது வயது சிறியதானாலும் முருகனது அருள் முழுமையாக
இருப்பதால் இத்தனையும் செய்ய முடிகிறது.



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

2 கருத்துகள்:

  1. அற்புதமான பரிகாரங்கள் முருகபெருமான் உரைப்பது.பொறுமை நம்பிக்கை இருப்பவர்களுக்கு முருகன் அருள்உண்டு.
    எமது குருநாதர் பொது நலத்தோடு வெளிப்படையாக சேவையினை செய்து வருவதால் குருவின் அருளை பெறுவதில் திருவருளையும் பெற்றுவிடலாம்...ஓம் ஸ்ரீ ஜெகதீஸ்வராய நமஹ

    பதிலளிநீக்கு