வெள்ளி, 26 ஜூன், 2020

  மாணிக்க வாசகர் எழுதும்படி திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் 
    அருளியவர் சிவபெருமானே

73 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


 
புலமை இலக்கணம் -மரபியல்பு     
மாணிக்க வாசகர் எழுதும்படி திருவாசகத்தையும் திருக்கோவையாரையும்
அருளியவர் சிவபெருமானே.

நூற்பா: 79     

பல்நாடு உடையவன் பாண்டி நாடே
உடையேன் என்னவந்து உரிமையோடு எழுதவும்
வாதபூர்ப் புலவன் வழங்கினன் தமிழே.

திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவராகிய சிவபெருமானே தென்னாடுடையவராக வந்து தாமே உரிமையோடு ஓலையில் எழுதும்படித் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார் என்றவாறு.


நன்றி: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம், நெறியாளர், உலகத்தொல்காப்பிய மன்றம்.


நன்றி சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: