வியாழன், 25 ஜூன், 2020


உயிர்ப்பதும் மடிய வைப்பதும் தமிழே

72வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   
  

புலமை இலக்கணம் - மரபியல்பு

 உயிர்ப்பதும் மடிய வைப்பதும் தமிழே

நூற்பா: 78   
                         
என்பு பெண்ணாகவும், ஈனச் சமணர்
வன்கழு ஏறவும், மறைக்கதவு அடைக்கவும்
காழியூர்ப் புலவன் கழறினன் தமிழே.

இதன்பொருள்:

சீகாழியில் தோன்றிய திருஞான சம்பந்தப் பெருமான் மயிலப்பூரில் பூம்பாவையின் எலும்புகளை மீட்டும் உயிருள்ள பெண்ணாகுமாறும், மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறுமாறும், திருமறைக்காட்டில் ஆலயக்கதவு அடைபடுமாறும் தேவாரப் பதிகங்களை அருளினார் என்றவாறு.



புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம், நெறியாளர், உலகத்தொல்காப்பிய மன்றம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: