ஞாயிறு, 14 ஜூன், 2020

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  
   
நூற்பா: 68 

புலமைக்கு உதவாத அத்தனை  தவறுகளையும் களைக
புலமையிற் கரவுதீர் நலம்பு கன்றனம்;
மரபியல்பு அதனையும் வகுக்குதும் அன்றே 68

இதன்பொருள்:

புலமையில் எந்தெந்தத் தீமைகள் களையப்பட்டுச் சிறப்பு உண்டாக வேண்டும் என இதுவரை கூறினாம். இனி அடுத்து மரபியல்பையும் வகுத்துச் சொல்வாம் என்றவாறு.

விளக்கம்:

குற்றங்களைக் காட்டிக் குறைகூறுவது தம் நோக்கமன்று என்பதைக் தெளிவு படுத்துவதற்காக இவ் வியல்பின் முதலில் ‘சாராது ஒழிப்பான் தவறு இயல்பு உரைக்குதும்” எனவும் இங்குக் “கரவுதீர் நலம்” என்றும் கூறினார். அடுத்துவரும் மரபியல்பு பெரும்பாலும் செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக்  கொண்ட தமிழ் இலக்கிய வரலாறாகவே அமைந்துள்ளது. மொழி இலக்கணத்தில் ஒரு பிரிவாக அம்மொழி இலக்கிய வரலாற்றை எம்மொழியாளரும் எங்கும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. இவரே புதுமையாக இவ்வாறு கூறுகிறார். எனவேதான் வகுக்குதும் என்றார்.

இந்நூற்பாவுடன் தவறியல்பு என்னும் இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த பிரிவாகிய மரபியல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன்அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக