செவ்வாய், 16 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 7


ஜீவநாடியை, குறி சொல்வது போன்று சொல்லப்படும் என்றும்,
மைவித்தை போல் இருக்குமோ என்றும், அந்த நேரத்தில் ஏற்படும்
எண்ணத்தின் வெளிப்பாடோ என்றும், நாடி ஜோதிடம் போன்று ஏற்கனவே எழுதி வைத்து
படிப்பதோ என்றும், அருள்வாக்கு என்றும், ஜோதிடம் சொல்வது
போல சொல்லப்படும் என்றும், எதிர்பார்த்து வருபவர்கள்
ஏமாந்துதான் போவார்கள்.

நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில், முருகப்பெருமான்,
அகத்தியர், சுகர் மற்றும் காகபுஜண்டர் ஆகியோரால்
உரைக்கப்படும் இரகசியங்கள் ஜோதிடப் பலன் அல்ல.
மாறாகப் பரிகாரம்
உரைக்கப்படுகிறது.

கர்மவினை குறைக்கும் சூட்சுமங்கள்
உரைக்கப்படுகின்றன. ஏனெனில் அடுக்கடுக்காய் ஆயிரம் பலன்கள்
சொன்னாலும் ஒருவர் பொருளாதார ரீதியில் பலன் அடையவில்லை என்றால்
நிறைவு ஏற்படுவதில்லை.

இல்லானை எல்லாரும் வேண்டாம்
என்கிறார்கள். பணம் இல்லாதவனை பரிசுத்தமானவன் என்று இந்தப் பாரினர்
மதிப்பதில்லை.

பணம் இருந்துவிட்டால் அவன் படுபாதகனாக இருந்தாலும்
பக்குவமானவன்,  பரிசுத்தமானவன் என இந்தப் பாரினர் கொண்டாடுகின்றனர்.

எனவே எம்மை நாடி, தேடி, அலைந்து திரிந்து
வந்து ஒரு வழியாக ஜீவ நாடி படித்து விட்டால் அவர் பணக்கார வாழ்வில் ஒரு படி எடுத்து
 வைத்துவிடுகிறார்.

அதன் பின்பு எந்த நிலையில் அவர்
இருந்தாலும் அதிலிருந்து சிறிது சிறிதாக பல மடங்கு தனது வாழ்வில் உயர்வினை அடைந்து
விடுகிறார்.

அதேபோல் தனது கர்மவினையைத் தீர்த்துக் கொள்ளாமல், இருப்பதால்தான்
பணக்கார வாழ்வினையோ, பகட்டு நிலையையோ சுகிக்க இயலாமல்
சுந்தர வடிவை இழந்து சூழ்ச்சியான வாழ்விற்கு பலியாக நேரிடுகிறது.

எனவே முருகப் பெருமானும் சரி, சித்தர்களும் சரி பலன் சொல்ல
விரும்புவதில்லை. பரிகாரம் சொல்லி வாழ்க்கையைச் சரி செய்கிறார்கள்.

ஜாதகத்தையே மாற்றுகிறார்கள். ஜீவ நாடி மூலம் பல இரகசியங்களை உரைத்து, செயல்பாடாத கிரகங்களைச் செயல்பட வைத்து, சீக்கிரத்தில்
சீரான வாழ்வை, சிரமமில்லாத வாழ்வை சித்தரிக்கிறார்கள். இதுதான்  இரகசியம்.


கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

5 கருத்துகள்: